Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை

06 ஆக, 2025 - 08:34 IST
எழுத்தின் அளவு:
Singers-association-demands-apology-from-Adoor-Gopalakrishnan-for-remarks-on-Pushpavathy
Advertisement


மலையாள திரையுலகில் பிரபல எழுத்தாளர், கதாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் மூத்த கலைஞரான இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட மாநாட்டில் கலந்து கொண்ட இவர், அந்த மாநாட்டில் பாடகர்கள் சங்கம் சார்பாக கலந்து கொண்ட பின்னணி பாடகி புஷ்பாவதி என்பவர் குறித்து சர்ச்சை அளிக்கும் விதமாக கருத்தை கூறினார். அதாவது, 'இதுபோன்ற திரைப்பட மாநாடுகளில் பின்னணி பாடகர்களுக்கு என்ன வேலை, அழைப்பிதழ் கூட இல்லாமல் வந்து விடுகிறார்கள்' என்பது போன்று அவர் கூறியிருந்தார். இது மலையாள பின்னணி பாடகர்கள் சங்கத்தினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பின்னணி பாடகர்கள் சங்கத்திலிருந்து அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் பாடகி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறும்போது, “திரைப்பட மாநாடு குறிப்பிட்ட எல்லை அளவிலேயே நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது இன்னும் பல அமைப்புகளை உடன் சேர்த்துக்கொண்டு விரிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு அங்கமாகத்தான் பாடகர் சங்கமும் நிறைந்துள்ளது. அதன் சார்பாக தான் முறையான அழைப்புகளின் பெயரில் தான் பாடகி புஷ்பாவதி உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இப்படிப்பட்ட நடைமுறைகளை கூட சரியாக தெரிந்து கொள்ளாத மூத்த கலைஞர் அடூர் கோபாலகிருஷ்ணன் இப்படி கருத்து கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் இது குறித்து தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர்வேட்பு மனுவை நிராகரித்த ... பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in