ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இரண்டுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆச்சரியமாக இந்த இரண்டு சங்கத்திற்கும் தலைமை பொறுப்புக்கு முதன்முறையாக ஒவ்வொன்றுக்குமே ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாகவே தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் இந்த முறை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் இரண்டு படங்கள்தான் தயாரித்திருக்கிறார் என்றும் மொத்தம் மூன்று படங்கள் தயாரித்திருக்க வேண்டும் என்றும் காரணம் காட்டி அவரது வேட்பு மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்தனர். அதே சமயம் சான்ட்ரா தாமஸ், விஜய் பாபு என்கிற நடிகருடன் இணைந்து ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற நிறுவனம் மூலமாக ஏழு படங்களை தயாரித்திருக்கிறார். அதை அவர்கள் வேண்டுமென்றே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தன்னை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்துள்ளதாக குற்றம் சாட்டிய சான்ட்ரா தாமஸ் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தான் நடிகர் மம்மூட்டி தன்னை தொலைபேசியில் அழைத்து, தற்போது தயாரிப்பாளர் சங்கம் குறித்து தான் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார் என ஒரு அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார் சான்ட்ரா தாமஸ்.
மேலும் இது குறித்து அவர் பேசும்போது, “மம்முட்டி என்னிடம் போனில் தொடர்புகொண்டு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசினார். நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்பதாகத்தான் அவரது பேச்சு இருந்தது. நான் அவரிடம் இதே இடத்தில் உங்கள் மகள் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. ஓகே உன் விருப்பம். இனி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார். ஒவ்வொருவரும் என்னை இங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் நான் நிச்சயமாக இங்கே இருப்பதற்கு இன்னும் அதிகமாக போராடுவேன்” என்று அழுத்தமாக கூறியுள்ளார் சான்ட்ரா தாமஸ்.