நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. சமீபகாலமாக அரசியலில் நுழைந்து பா.ஜ.,வில் இணைந்து எம்பி தேர்தலில் வெற்றிபெற்று தற்போது மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன்கள் கோகுல் சுரேஷ் மற்றும் மாதவ் சுரேஷ். இதில் கோகுல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே நடித்து வருகிறார். சமீபத்தில் தான் மாதவ் சுரேஷ் ஒரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் மாதவ் சுரேஷ், கேரளாவில் பஸ் டிரைவர்களின் அதிவேக டிரைவிங் குறித்து கண்டிக்கும் விதமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அதில் கூறும்போது, “சமீபத்தில் இரவு நேரம் நானும் என் சகோதரர் கோகுல் சுரேஷும் குருவாயூரில் இருந்து கொச்சிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது எதிர்புறமாக கேரள அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இரண்டும் ஒன்றை ஒன்று முந்தும் விதமாக போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் வந்தன. நூலிழையில் எங்கள் கார் அந்த விபத்தில் இருந்து தப்பியது. இன்னும் ஒரு இன்ச் எங்கள் கார் நகர்ந்து இருந்தாலும் நாங்கள் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி மிகப்பெரிய விபத்தை சந்தித்திருப்போம்.
இதுபோன்று பஸ் டிரைவர்களின் அராஜகத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அரசு இதுபோன்ற பேருந்து ஓட்டுநர்களை கட்டுப்படுத்த தவறினால் அல்லது இதே போன்ற விஷயம் திரும்பவும் நடந்தால், தயவுசெய்து எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விடுங்கள்.. நான் அந்த டிரைவர்களின் பல்லை உடைப்பேன்.. வண்டி டயர்களை துவம்சம் செய்து விடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.