எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

கடந்த வருடம் தெலுங்கு திரையுலகில் இருந்து வரலாற்று மற்றும் புராண படங்கள் சில வெளியாகி வரவேற்பு பெற்றன. அந்த வகையில் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது ‛கண்ணப்பா'. நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியுள்ளார். பாகுபலி கதாசிரியர் விஜயந்திர பிரசாந்த் இந்த கதையில் மிக முக்கிய பங்காற்றி உள்ளார். அது மட்டுமல்ல மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கியமான சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் மோகன்லால் நடிக்கும் கிராதா என்கிற கதாபாத்திரம் மற்றும் அவரது தோற்றம் குறித்த போஸ்டர் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாயகன் விஷ்ணு மஞ்சு மோகன்லாலின் கதாபாத்திரம் குறித்து கூறும்போது, “படத்தில் மோகன்லாலின் அறிமுக காட்சியே இரண்டு நிமிடம் இடம்பெற இருக்கிறது. அந்த காட்சியில் தியேட்டரே அதிரப்போவது நிச்சயம். ரசிகர்கள் எதிர்பாராத விதமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த கதாபாத்திரம் குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் இந்த கதையை எழுதியபோது ஒரு கதாபாத்திரம் தேவை இல்லை என்று அதை நீக்கி விட்டோம். பிறகு பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்திடம் இந்த கதை குறித்து நாங்கள் பேசியபோது, நீக்கிய அந்த கதாபாத்திரம் குறித்தும் நாங்கள் கூறினோம். அப்போது அவர் எதற்காக அந்த கதாபாத்திரத்தை நீக்கினீர்கள். கதைக்கு அந்த கதாபாத்திரம் இருந்தால் தான் ஒரு தெளிவு கிடைக்கும் என்று அதன் முக்கியத்துவத்தை கூறினார். அப்போதுதான் எங்கள் முடிவு தவறு என உணர்ந்தோம். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை மீண்டும் படத்தில் இணைத்தோம். அதுதான் மோகன்லாலின் கிராதா கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார்.