பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

மலையாள திரை உலகில் தயாரிப்பாளர்களின் நலனை காப்பாற்றும் விதமாகவும் திரைப்படங்களில் ஹீரோக்களின் தலையீடு, பட்ஜெட், சம்பளம் ஆகியவற்றை முறைப்படுத்தும் விதமாகவும் வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து ஸ்ட்ரைக் தொடங்க இருக்கிறது என்று பிரபல தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான தயாரிப்பாளர் சுரேஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல நடிகர்களே படங்களின் தயாரிப்பாளராக மாறுவதற்கும் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இவரது இந்த கருத்துக்கு சமீபத்தில் நடிகர் விநாயகன் சினிமா என்ன உங்கள் குடும்ப சொத்தா என்று எதிர் கேள்வி எழுப்பி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
இந்த நிலையில் ஜூன் மாதம் சினிமா ஸ்ட்ரைக் தொடங்குகிறது என இவர் கூறிய கருத்துக்கு மோகன்லாலை வைத்து தொடர்ந்து ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வரும் அவரது ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளதுடன் சுரேஷ்குமாரிடம் பல கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.
“தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஜூன் மாதம் முதல் போராட்டம் என அறிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தா? அல்லது தயாரிப்பாளர் சங்கம் ஒன்று கூடி எடுத்த முடிவா? தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்திருந்தால் அதை இன்னும் ஏன் வெளிப்படையாக அறிக்கையாக வெளியிடவில்லை. அப்படி சுரேஷ்குமார் எடுத்த முடிவு தவறு என தற்போது எதிர்ப்பு வலுக்கும் நிலையில் அவரது முடிவு சரியாக இருந்தால் தயாரிப்பாளர் சங்க முக்கிய பொறுப்பாளர்களான ஆன்டோ ஜோசப் போன்றவர்கள் ஏன் அவரை ஆதரித்து இதுவரை எதுவும் கருத்து கூறவில்லை?
தயாரிப்பாளர் சுரேஷ்குமார் இப்படி தன்னிச்சையாக தனது முடிவுகளை தயாரிப்பாளர் சங்கமே எடுத்துள்ளது போன்று அறிவித்திருப்பது சரியானது அல்ல. ஒவ்வொரு படத்தையும் நம்பி 100 முதல் 1000 குடும்பங்கள் பிழைக்கின்றன. அதை தடுத்து நிறுத்துவது தவறான செயல்” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்தை நடிகரும் இன்னொரு தயாரிப்பாளருமான பிரித்விராஜ் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இன்னும் சில நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கூட ஆண்டனி பெரும்பாவூரின் கருத்தை ஆதரித்து பேசி வருவதால் தயாரிப்பாளர் சுரேஷ்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.