22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய வெற்றியை பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எம்புரான் என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் மார்ச் 27ல் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என முக்கிய நட்சத்திரங்கள் இதிலும் தொடர்கின்றனர். இவர்களோடு முதல் பாகத்தில் ஒரு டிவி சேனல் சிஇஓ கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நைலா உஷாவும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார். இவரது கதாபாத்திர போஸ்டரை நடிகர் மோகன் வெளியிட்டார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நைலா உஷா கூறும்போது, “முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு டிவி நிர்வாகத்தின் சிஇஓ ஆக இருந்தேன். இப்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல் படம் என்பதால் இத்தனை வருடங்களில் அரசியலும் மாறிவிட்டது. அதேபோல என்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையும் மாறி இருக்கும் இல்லையா? அதற்கு ஏற்றபடி எனது கதாபாத்திரம் எம்புரானில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.