அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
மலையாள திரையுலகில் மம்முட்டி நடித்த பிக் பி என்கிற படத்தில் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சமீர் தாஹிர். அதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி மற்றும் சாய் பல்லவி துல்கர் நடித்த கலி என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் ஒளிப்பதிவாளராக மாறிய இவர் தொடர்ந்து ஒளிப்பதிவாளராகவே பணியாற்றி வருகிறார். குறிப்பாக சூப்பர் மேன் கதையம்சத்துடன் வெளியான மின்னல் முரளி படத்தில் இவரது ஒளிப்பதிவு மிகுந்த வரவேற்பு பெற்றது. கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் படமான ஆவேசம் படத்திலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.
இந்த நிலையில் 2016ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருக்கிறாராம் சமீர் தாஹிர். ஹீரோ வேறு யாரும் அல்ல.. இந்தமுறையும் துல்கர் சல்மான் தான். இதற்கான கதை உருவாக்கும் பணியில் சமீப நாட்களாக ஈடுபட்டு வரும் சமீர் தாஹிர் வேறு எந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். துல்கர் சல்மான் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்த பிறகு இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம் சமீர் தாஹிர்.