விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்கிக் கொண்டிருந்தாலும், அல்ல அர்ஜுனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் 4ந் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை குற்றவாளியாக்கிய அரசு, கடந்த 13ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நடந்து வரும் நம்பள்ளி கோர்ட்டு நேற்று அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஒரு லட்சம் ரூபாய் பிணயத் தொகையுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், கோர்ட்டு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.