ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் இணையாக வளர்ந்து வந்தவர் தான் நடிகர் சுரேஷ்கோபி. குறிப்பாக ஆக்ஷன் படங்களாக நடித்து ஆக்ஷன் ரசிகர்களின் மிகப்பெரிய வட்டத்தை பெற்றிருந்தார். சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இறங்கி தேசிய கட்சியான பாஜகவில் சேர்ந்தார். சில ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார்.
2024ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் எம்பி ஆக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பெட்ரோலியம் எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே துறை சார்ந்த பணிகளை கவனித்து வந்த அவர் தான் ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துக் கொடுப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.
சமீபத்தில் தான் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் கடந்த 2020லேயே அவர் நடிப்பதாக துவங்கப்பட்டு கொரோனா தாக்கம், கதை பிரச்னை, சுரேஷ் கோபியின் அரசியல் பயணம் என பல காரணங்களால் நின்று போயிருந்த ஒத்தக்கொம்பன் திரைப்படம் தற்போது படப்பிடிப்பை துவங்கியுள்ளது. மத்திய அமைச்சரான பிறகு நீண்ட நாட்கள் கழித்து சுரேஷ்கோபி. இந்த படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக நேற்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.