‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர், பின்னர் கணவருடன் சர்ச்சை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்து மறு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான அவர், தற்போது அமெரிக்காவில் நடனப் பள்ளி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 11,600 பரதநாட்டிய கலைஞர்களை ஒன்றிணைத்து எட்டு நிமிட பாடல் ஒன்றுக்கு அழகாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் திவ்யா உன்னி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டிய மங்கைகள் அனைவருமே ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தது கூடுதல் ஆச்சரியம். அதுமட்டுமல்ல இதில் ஏழு வயது சிறுமி கூட பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதில் 10,176 பரதநாட்டிய கலைஞர்களும் சுமார் 500 பரதநாட்டிய ஆசிரியர்களும் இணைந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் கூட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.