சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாள நடிகை திவ்யா உன்னி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம், பின்னர் விவாகரத்து, அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடனத்தில் கைதேர்ந்தவரான திவ்யா உன்னி தற்போது அங்கே பரத நாட்டிய வகுப்புகள் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா வந்த திவ்யா உன்னி, கொச்சி நேரு ஸ்டேடியத்தில் 11 ஆயிரத்து 600 பரதநாட்டிய கலைஞர்களுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி கின்னஸ் சாதனை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அத்தனை பேர் இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் முக்கிய முகமாக திவ்யா உன்னி தான் இருந்தார். அமைச்சர் ஷாஜி செரியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரள எம்எல்ஏ உமா தாமஸ் என்பவர் வருகை தந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கால் தவறி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார் எம்எல்ஏ உமா தாமஸ். பலத்த அடிபட்ட அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகை திவ்யா உன்னி இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அமெரிக்காவிற்கு கிளம்பி சென்று விட்டார். தற்போது இது குறித்து நடிகை காயத்ரி வர்ஷா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “திவ்யா உன்னியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த எம்எல்ஏ காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவமனையில் சென்று திவ்யா உன்னி நலம் விசாரிக்கவில்லை. குறைந்தபட்சம் அவரது உடல்நலம் நன்றாக வேண்டும் என்று சோசியல் மீடியாவில் கூட ஒரு பதிவு வெளியிடவில்லை. இந்த அளவிற்கு ஒருவர் சுயநலமாக இருக்கக் கூடாது” என்றும் விமர்சித்துள்ளார்.