வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீப காலங்களாக தனது சர்ச்சையான பேச்சுக்களால் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவரது படங்கள் தான் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் ஆகும் போதும் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அனல் பறக்கும், ரத்தம் தெறிக்கும் அதிக அளவு வன்முறை காட்சிகளுடன் தனது படங்களை கொடுத்து வந்தவர் ராம்கோபால் வர்மா. இப்போது மலையாளத்தில் வெளியாகி உள்ள உன்னி முகுந்தன் நடித்துள்ள ‛மார்கோ' திரைப்படம் தனது படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக வன்முறை விருந்தாக உருவாகி இருப்பதை பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
இது குறித்து தனது மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா, “மார்கோ படத்தை விட வேறு எந்த ஒரு படத்திற்கும் இந்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான பாராட்டு கிடைத்திருக்குமா என்றால் ஒருபோதும் இல்லை. அந்த அளவிற்கு இந்த படத்தை பார்ப்பதற்கு நான் சாவதற்கு கூட தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னி முகுந்தன் என்னை நிச்சயம் கொல்ல மாட்டார் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட ஏழு சண்டை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஏழுமே அதிக அளவில் வன்முறை கொண்ட சண்டைக் காட்சிகளாக தான் படமாக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த படம் ராம்கோபால் வர்மாவின் பாராட்டுகளை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.




