எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

மலையாளத்தில் கடந்த வருடம் மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் ‛மார்கோ' என்கிற திரைப்படம் வெளியானது. ஹனீப் அதேனி என்பவர் இயக்கிய இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அதேசமயம் இந்த படத்தில் அதீத வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தும் கூட இந்த சாதனையை செய்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்தின் ஹீரோ உன்னி முகுந்தனும் அதில் நடிக்கப் போகிறேன் என்று முதலில் கூறியவர், பின்னர் இந்த படத்தில் தான் சந்தித்த நெகட்டிவிட்டி காரணமாக இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
அடுத்ததாக அவர் பிரதமர் நரேந்திர மோடியின் சுயசரிதையில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மார்கோ இரண்டாம் பாகத்திற்கு ‛லார்ட் மார்கோ' என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதில் கன்னட முன்னணி நடிகர் யஷ் நடிக்கிறார் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் மார்கோ இரண்டாம் பாகத்தில் யஷ் நடிக்கவில்லை என்று அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகி வரும் ‛டாக்ஸிக்' என்கிற படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் யஷ்.