அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்து விட்டார் ராம்சரண். இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தனது அடுத்த படமாக தெலுங்கு இளம் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்க துவங்கி விட்டார் ராம்சரண். இந்த இயக்குனர் தான் விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் ‛உப்பென்னா' என்கிற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அந்த படத்தில் நடிகை கிர்த்தி ஷெட்டியையும் அறிமுகப்படுத்தியவர். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். தேவரா படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது.
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் திவ்யேந்த் சர்மா என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். பாலிவுட்டில் கடந்த 15 வருடங்களாக குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்படும் இவர், இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார். இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவ-22 முதல் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.