ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
இன்றைய தேதியில் மலையாள திரையுலகில் அதிக படங்களில் நடித்த வருவது யார் என்றால் சந்தேகமே இல்லாமல் அது நடிகர் மோகன்லால் தான் என சொல்லலாம். இந்த வருடத்தில் அவரது முதல் படமாக கடந்த ஜனவரியில் 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படம் தோல்வியையே தழுவியது. அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் மோகன்லால் நடித்த வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. அதே சமயம் அவரது கைவசம் தான் அதிக படங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் குறிப்பாக அவர் முதன் முதலாக இயக்கியுள்ள 'பரோஸ்' திரைப்படம் முதற்கொண்டு வரிசையாக அவரது ஐந்து படங்கள் வெளியாகும் தேதிகள் தற்போது மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல் ரிலீஸாக 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து மோகன்லால், ஷோபனா நடித்துள்ள 'தொடரும்' படம் ஜனவரி 30ம் தேதியும், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' மார்ச் 27ம் தேதியும், சத்யன் அந்திகாடு டைரக்சனில் நடித்துவரும் 'ஹிருதயபூர்வம்' படம் ஆகஸ்ட் 28ம் தேதியும், தெலுங்கில் அவர் நடித்து வரும் 'விருஷபா' திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாக இருக்கின்றன.