கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

இன்றைய தேதியில் மலையாள திரையுலகில் அதிக படங்களில் நடித்த வருவது யார் என்றால் சந்தேகமே இல்லாமல் அது நடிகர் மோகன்லால் தான் என சொல்லலாம். இந்த வருடத்தில் அவரது முதல் படமாக கடந்த ஜனவரியில் 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படம் தோல்வியையே தழுவியது. அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் மோகன்லால் நடித்த வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. அதே சமயம் அவரது கைவசம் தான் அதிக படங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் குறிப்பாக அவர் முதன் முதலாக இயக்கியுள்ள 'பரோஸ்' திரைப்படம் முதற்கொண்டு வரிசையாக அவரது ஐந்து படங்கள் வெளியாகும் தேதிகள் தற்போது மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல் ரிலீஸாக 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து மோகன்லால், ஷோபனா நடித்துள்ள 'தொடரும்' படம் ஜனவரி 30ம் தேதியும், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' மார்ச் 27ம் தேதியும், சத்யன் அந்திகாடு டைரக்சனில் நடித்துவரும் 'ஹிருதயபூர்வம்' படம் ஆகஸ்ட் 28ம் தேதியும், தெலுங்கில் அவர் நடித்து வரும் 'விருஷபா' திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாக இருக்கின்றன.