10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

இன்றைய தேதியில் மலையாள திரையுலகில் அதிக படங்களில் நடித்த வருவது யார் என்றால் சந்தேகமே இல்லாமல் அது நடிகர் மோகன்லால் தான் என சொல்லலாம். இந்த வருடத்தில் அவரது முதல் படமாக கடந்த ஜனவரியில் 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படம் தோல்வியையே தழுவியது. அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் மோகன்லால் நடித்த வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. அதே சமயம் அவரது கைவசம் தான் அதிக படங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் குறிப்பாக அவர் முதன் முதலாக இயக்கியுள்ள 'பரோஸ்' திரைப்படம் முதற்கொண்டு வரிசையாக அவரது ஐந்து படங்கள் வெளியாகும் தேதிகள் தற்போது மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல் ரிலீஸாக 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து மோகன்லால், ஷோபனா நடித்துள்ள 'தொடரும்' படம் ஜனவரி 30ம் தேதியும், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' மார்ச் 27ம் தேதியும், சத்யன் அந்திகாடு டைரக்சனில் நடித்துவரும் 'ஹிருதயபூர்வம்' படம் ஆகஸ்ட் 28ம் தேதியும், தெலுங்கில் அவர் நடித்து வரும் 'விருஷபா' திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாக இருக்கின்றன.