ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

1989ல் தெலுங்கில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கிரிஜா. இந்தப் படம் தமிழில் 'இதயத்தை திருடாதே' என்கிற பெயரில் வெளியாகி இங்கேயும் வரவேற்பை பெற்றதுடன் நடிகர் நாகார்ஜுனாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தையும் பெற்று தந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கிரிஜாவின் துருதுருப்பான, துணிச்சலான, துள்ளாத நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்த இளம் பெண் கதாபாத்திரம் ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது. அந்த படத்தில் வரவேற்பை பெற்ற கிரிஜா அதே வருடத்தில் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'வந்தனம்' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். வந்தனம் படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த ஒன்று இரண்டு படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து மீண்டும் படிப்பதற்காக இங்கிலாந்து திரும்பி விட்டார் கிரிஜா. இடையில் 2003ல் ஹிந்தியில் வெளியான 'சனம் மேரி கசம்' படத்தில் சில நொடிகள் வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து மீண்டும் தென்னிந்திய சினிமாவிற்கு திரும்பியுள்ள நடிகை கிரிஜா கன்னடத்தில் உருவாகி வரும் 'இப்பணி தப்பிதா இலேயாளி' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது உருவ தோற்றமும் நிறையவே மாறி இருந்தாலும் முன் போலவே ரசிகர்களின் இதயத்தை தனது நடிப்பால் திருடுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.