சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு திரையுலகில் ஓரளவு பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவரான குலசேகர் என்பவர் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இவர் கடந்த 2006ல் பாஸ்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான பொம்மரிலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாடலாசிரியராக மாறினார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதன் பிறகு இசையமைப்பாளர் ஆர்.பி பட்நாயக் (ஜெயம் பட இசையமைப்பாளர்) இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ள இவர் பாடல்களால் மட்டுமல்ல பரபரப்பான விஷயங்களாலும் இன்னும் பிரபலமானார்.
2018ல் காக்கிநாடாவில் உள்ள ஒரு தேவி கோவிலில் குலசேகர் திருடும்போது போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மொபைல் போன்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் என கைப்பற்றப்பட்டன. இவரது இந்த குற்றச்செயலைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இவரிடமிருந்து விலகி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.