Advertisement

சிறப்புச்செய்திகள்

சின்னத்திரை நடிகை இந்திய அழகியாக தேர்வு | 212 நாட்கள் நடைபெற்று முடிந்த ஜெயசூர்யாவின் கத்தனார் படப்பிடிப்பு | நடனம் ஆடுவதற்கு பயந்து காலை ஒடித்துக்கொள்ள நினைத்த ஜோதிர்மயி | அப்பாவின் படத்தையே மகனுக்கு சுட்டுக்கொடுத்த வெங்கட் பிரபு : அவரே வெளியிட்ட தகவல் | குருவாயூர் அம்பல நடையில் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த பிரித்விராஜ் | புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஓய்வெடுக்க செல்லும் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | டிரைலரிலும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்! | மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி | நாளை அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'புஷ்பா 2' படப்பிடிப்பு நிறைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

212 நாட்கள் நடைபெற்று முடிந்த ஜெயசூர்யாவின் கத்தனார் படப்பிடிப்பு

18 அக், 2024 - 12:52 IST
எழுத்தின் அளவு:
The-shooting-of-Jayasuriya-Kathanar-was-completed-in-212-days

மலையாள திரையுலகில் நல்ல கதை அம்சங்கள் மட்டுமே கொண்ட படங்கள் குறைந்த பட்ஜெட் செலவில் வெளியாகி வந்த நிலையில் சமீப வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு சவால் விடும் அளவிற்கு பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்க துவங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பீரியட் படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படம் மூன்று வித காலகட்டங்களில் நிகழும் ஒரு பீரியட் படமாக வெளியானது. அடுத்ததாக மோகன்லால் முதன்முறையாக இயக்குனராக இயக்கியுள்ள பரோஸ் திரைப்படமும் வாஸ்கோடகாமா காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது, விரைவில் வெளியாகவும் உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யாவின் திரை உலக பயணத்தில் அவர் முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் படமாக கத்தனார் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயசூர்யா தவிர பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரை உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. ஹோம் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜின் தாமஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் வரலாற்று பின்னணியில் தான் உருவாகிறது.

அதுமட்டுமல்ல மலையாள திரையுலகிலேயே முதன்முறையாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் படமும் இதுதான். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 18 மாதங்களாக 6 கட்ட படப்பிடிப்புகளாக 212 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்கிற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குருவாயூர் அம்பல நடையில் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த  பிரித்விராஜ்குருவாயூர் அம்பல நடையில் ... அப்பாவின் படத்தையே மகனுக்கு சுட்டுக்கொடுத்த வெங்கட் பிரபு : அவரே வெளியிட்ட தகவல் அப்பாவின் படத்தையே மகனுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in