'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படம் வெளியானது. புது மனைவி தனக்கு அடங்கிப்போக வேண்டும் என நினைக்கும் திமிர்பிடித்த இளம் கணவனுக்கு அவள் எப்படி பாடம் புகட்டுகிறாள் என காமெடியாக இந்த படம் சொன்னது. அதனால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பஷில் ஜோசப், நிகிலா விமல் ஆகியோரை வைத்து குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கினார்.
அந்த படமும் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரித்விராஜூடன் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் இயக்குநர் விபின்தாஸ். இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு சந்தோஷ் டிராபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.