ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படம் வெளியானது. புது மனைவி தனக்கு அடங்கிப்போக வேண்டும் என நினைக்கும் திமிர்பிடித்த இளம் கணவனுக்கு அவள் எப்படி பாடம் புகட்டுகிறாள் என காமெடியாக இந்த படம் சொன்னது. அதனால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பஷில் ஜோசப், நிகிலா விமல் ஆகியோரை வைத்து குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கினார்.
அந்த படமும் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரித்விராஜூடன் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் இயக்குநர் விபின்தாஸ். இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு சந்தோஷ் டிராபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.




