2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகையான நெய்யாற்றின்கரை கோமளம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 96. கடந்த 1951ல் டார்ஜான் படத்தை தழுவி மலையாளத்தில் காட்டை மையப்படுத்தி வெளியான முதல் படமான வனமாலா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் கோமளம். அதன் பிறகு 1952 ல் நடிகர் பிரேம் நசீர் கதாநாயகனாக அறிமுகமான மருமகள் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார் கோமளம்.
1955ல் வெளியான நியூஸ் பேப்பர் பாய் என்கிற படத்தில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. ஆனாலும் 1955 வரை நான்கு வருடங்கள் மட்டுமே தனது நடிப்பை தொடர்ந்த கோமளம் குடும்பப் பிரச்சினை மற்றும் அப்போது சமூகத்தில் எழுந்த சில எதிர்ப்புகள் காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.