‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |
மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகையான நெய்யாற்றின்கரை கோமளம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 96. கடந்த 1951ல் டார்ஜான் படத்தை தழுவி மலையாளத்தில் காட்டை மையப்படுத்தி வெளியான முதல் படமான வனமாலா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் கோமளம். அதன் பிறகு 1952 ல் நடிகர் பிரேம் நசீர் கதாநாயகனாக அறிமுகமான மருமகள் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார் கோமளம்.
1955ல் வெளியான நியூஸ் பேப்பர் பாய் என்கிற படத்தில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. ஆனாலும் 1955 வரை நான்கு வருடங்கள் மட்டுமே தனது நடிப்பை தொடர்ந்த கோமளம் குடும்பப் பிரச்சினை மற்றும் அப்போது சமூகத்தில் எழுந்த சில எதிர்ப்புகள் காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.