ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் செய்து வரும் அவர் முதலில் தான் அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடாக பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இன்னொரு பக்கம் தொடர்ந்து தனக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தர்ஷன். ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்கள் சிலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பெங்களூரு நீதிமன்றம் அவர் கடைசியாக விண்ணப்பித்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கடந்த மாதம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் தள்ளி வைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை வந்த போது மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நீதிமன்றம். அதே சமயம் தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்கிற ஒரு ஆறுதலான தகவலையும் அதில் தெரிவித்துள்ளது.