வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள திரை உலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல விஷயங்களில் அவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் ஹேமா கமிஷன் அறிக்கை தெளிவாக விளக்கி இருந்தது. இதனை தொடர்ந்து பல நடிகைகள் சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் சந்தித்த கசப்பான பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை குற்றசாட்டாக, புகார்களாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த விஷயத்தில் நடிகர் சங்கமும், இயக்குனர் சங்கமும் தான் பெரிய அளவில் அடிபட்டன. ஆனால் தற்போது மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் இது பாலியல் துன்புறுத்தலாக இல்லாமல் தயாரிப்பாளர்களை சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மதிப்பதில்லை என்றும் தலைமையில் புதிய மாற்றம் வர வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார் பெண் தயாரிப்பாளரான சான்ட்ரா தாமஸ்.
கடந்த வருடம் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு என்பவருடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார் சான்ட்ரா தாமஸ். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் இணைந்து நடைபெறும் கலை விழாக்களுக்கு கூட 95 சதவீத தயாரிப்பாளர்களை அழைப்பதில்லை, எங்களுடைய பிரச்சனைகளை குறிப்பாக தயாரிப்பில் ஈடுபடும் பெண்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள கூட முன்வருவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் மம்முட்டியின் மிக நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான ஆண்டோ ஜோசப் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




