‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளித்தனர். அதில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்தார். அது மட்டுமல்ல கோழிக்கோட்டை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் ஆண் நடிகர் ஒருவரும் நடிகர் ரஞ்சித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் வாய்ப்பு கேட்டு சென்ற தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை ஒரு பிரபல நடிகைக்கு அனுப்பியதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் இயக்குனர் ரஞ்சித். இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் அந்த ஆண் நடிகர் கூடிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ளனர்,
இது குறித்து அவர்கள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகர் 2012ல் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற இயக்குனர் ரஞ்சித்தின் படப்பிடிப்பிற்கு அவரை சந்திக்க வந்த போது ஒரு டிஷ்யூ பேப்பரில் தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுத்த ரஞ்சித் பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள தாஜ் ஹோட்டலுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு கூறியதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டல் துவங்கப்பட்டதே 2015 க்கு பிறகு தான் அப்படி இருக்கையில் எப்படி அந்த ஹோட்டலுக்கு தன்னை வரச்சொன்னதாக அந்த நபர் குறிப்பிட்டது உண்மையாக இருக்க முடியும் என்று கூறி இந்த வழக்கு வேண்டுமென்றே இயக்குனர் ரஞ்சித்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.