ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தெலுங்கில் ரவிதேஜா கதாநாயகனாக நடித்துள்ள மிஸ்டர் பச்சன் என்கிற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் கடந்த 2018ல் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ரெய்டு படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. படம் துவங்கும்போதே இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது. அதே சமயம் படத்தின் இயக்குனரான ஹரிஷ் சங்கர் இதன் ரீமேக் உரிமையை நாங்கள் வாங்கி இருந்தாலும் கிட்டத்தட்ட தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றது போல புத்தம் புதிதாக காட்சிகளை உருவாக்கியுள்ளோம். ரீமேக் படம் பார்த்தது போலவே இருக்காது என்று கூறி வருகிறார்.
இருந்தாலும் இவர் ஏற்கனவே இரண்டு ரீமேக் படங்களை இயக்கியதால் இந்தப் படத்தையும் அதேபோல காட்சிக்கு காட்சி எடுத்து வைத்திருப்பார் என்று சோசியல் மீடியாவில் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ரொம்பவே வருத்தத்திற்கு ஆளான ஹரிஷ் சங்கர், “வேண்டுமென்றால் இந்த படம் பார்க்க வருவதற்கு முன்பாக ஹிந்தியில் வெளியான ரெய்டு படத்தையும் ஒரு தடவை பார்த்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் அதிலிருந்து இந்த படத்தை நாங்கள் எவ்வளவு வித்தியாசப்படுத்தி புதிதாக எடுத்திருக்கிறோம்” என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று அழாத குறையாக வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
கமல் நடித்த விக்ரம் படம் வெளியான போது கூட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் பார்க்க வரும் ரசிகர்களை தனது கைதி படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு விக்ரம் படம் பார்க்க வாருங்கள் என்று கோரிக்கை வைத்ததை போலவே தற்போது இயக்குனர் ஹரிஷ் சங்கரும் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.