திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டன. நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடும் மனிதர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து இரவு பகலாக செயல்பட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
முதல் ஆளாக தமிழகத்தில் இருந்து நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை கேரள முதல்வர் நிதிக்கு வழங்கி இதை துவங்கி வைத்தார். இதையடுத்து சூர்யா - கார்த்தி - ஜோதிகா தரப்பில் ரூ.50 லட்சம் நிதி அளித்தனர். இதனை அடுத்து தற்போது மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து 35 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். அது மட்டுமல்ல மம்முட்டியின் அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சேவையையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேப்போல நடிகர் பஹத் பாசில் மற்றும் அவரது மனைவி நஸ்ரியா இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். நடிகை நிகிலா விமல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்களை திரட்டும் பணியில் தன்னார்வலாக தன்னை இணைத்துக் கொண்டு களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.