2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள சினிமாக்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் கூட்டிக்கல் ஜெயசந்திரன். ராசலீலா, சாந்துப்பொட்டு, திளக்கம், சிரிக்குடுக்கா, வர்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். 48 வயதான இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு விருந்தினராக சென்றிருந்தபோது அங்கு பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு கசபா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் மற்றும் கேரள டிஜிபியிடம் புகார் செய்து உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் ஜெயச்சந்திரன் கைது செய்ப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.