போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‛கும்கி' படத்தில் பாரஸ்ட் ஆபிசராக நடித்தார். தொடர்ந்து வேட்டை, கதகளி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற சிறுமியர்கள் முன்பு காரில் இருந்தபடி தனது ஆடையை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். ஆனால் அந்த நபர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சிசிடி காட்சிகளின் அடிப்படையில் காரை அடையாளம் கண்ட போலீசார் அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளாராம். கடந்த 2016ம் ஆண்டும் இதே மாதிரியான வழக்கு ஒன்றில் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.