அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

கடந்த வாரம் இயக்குனர் ஹரி, நடிகர் அருண்விஜய் கூட்டணியில் யானை திரைப்படம் வெளியானது. அண்ணன்களையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் தம்பி என்கிற வழக்கமான டெம்ப்ளேட்டில் ஆணவக்கொலை என்கிற இன்னொரு விஷயத்தையும் சேர்த்து இந்த படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் ஹரி. சரி படம் என்றாலே வழக்கமான சில கிளிஷே காட்சிகள் இருந்தாலும் கூட, படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது..
அந்தவகையில் இந்த யானை படத்திலும் ஹரியின் முந்தைய படங்களின் காட்சிகளையே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அதேசமயம் ஹரியின் முந்தைய படங்களை போன்ற விறுவிறுப்பு இதில் குறைவாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் இந்தப்படத்தில் ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது என்றும் நேற்று முதல் புதிய யானை தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன என்பதை படக்குழுவினர் வெளியிட மறுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.