ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
கடந்த வாரம் இயக்குனர் ஹரி, நடிகர் அருண்விஜய் கூட்டணியில் யானை திரைப்படம் வெளியானது. அண்ணன்களையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் தம்பி என்கிற வழக்கமான டெம்ப்ளேட்டில் ஆணவக்கொலை என்கிற இன்னொரு விஷயத்தையும் சேர்த்து இந்த படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் ஹரி. சரி படம் என்றாலே வழக்கமான சில கிளிஷே காட்சிகள் இருந்தாலும் கூட, படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது..
அந்தவகையில் இந்த யானை படத்திலும் ஹரியின் முந்தைய படங்களின் காட்சிகளையே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அதேசமயம் ஹரியின் முந்தைய படங்களை போன்ற விறுவிறுப்பு இதில் குறைவாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் இந்தப்படத்தில் ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது என்றும் நேற்று முதல் புதிய யானை தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன என்பதை படக்குழுவினர் வெளியிட மறுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.