குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை பொருத்தவரை ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் எப்போதும் தொடர்பில் இருப்பவர். தன்னுடைய பர்சனல் விஷயங்கள், சினிமா தகவல்கள் அனைத்தையும் தன் கைப்படவே சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பட்டு வேட்டி, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஓணம் வாழ்த்துக்களை கூறியிருந்தார். ஆனால் ஓணம் பண்டிகை முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து அமிதாப் பச்சன் இப்படி வாழ்த்து சொன்னது ரசிகர்களிடம் குறிப்பாக மலையாளிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே பலரும் அமிதாப்பச்சனை கிண்டல் செய்து கமெண்ட் பதிவிட்டனர். அதாவது அமிதாப்பச்சனின் அட்மின் குழுவினர் ஓணம் பண்டிகையை மறந்து விட்டார்களோ என்றும், இல்லை கடந்த வருடம் செப்டம்பர் 14ம் தேதி ஓணம் பண்டிகை வந்ததால் அதை மனதில் வைத்து மறதியாக அமிதாப்பச்சன் இப்போது ஓணம் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறாரோ என்றும் கூட கிண்டலாக கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனாலும் இதை கவனித்த அமிதாப் பச்சன் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில், “பண்டிகை கொண்டாட்டம் என்பது எப்போதுமே ஒரு கொண்டாட்டம் தான்.. அதற்கான மதிப்பும் மரியாதையும் ஒருபோதும் அழிவதில்லை. நான் எப்போதுமே என்னுடைய பதிவுகளை சொந்தமாகவே வெளியிடுகிறேன். எனக்கென யாரும் ஏஜென்ட் இல்லை.. இருந்தாலும் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.