'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது 83 வயதாகும் நிலையில் கூட தொடர்ந்து சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டு தன்னை எப்போதும் பிசியாகவே வைத்துக் கொள்கிறார். அதேபோல தனது நட்பு வட்டாரங்களுக்கும் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர் தான் அமிதாப் பச்சன். இந்த நிலையில் அவருடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் காலமானார். அவரது மரணம் அமிதாப் பச்சனை ரொம்பவே பாதித்துள்ளது.
இது குறித்து அவர் தனது பிளாக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் அன்பான இன்னொரு நண்பரை இழந்தேன். அளவற்ற பாசமும் நகைச்சுவையும் நிறைந்தவர். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் வழியை கண்டுபிடிக்கும் திறமைசாலி. அவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை.. ஆனால் அவர் போய்விட்டார் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.. ஒவ்வொருவராக அனைவரும் வெளியேறுகிறார்கள்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.