தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த 2022ல் கன்னடத்தில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கி வெளியான 'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் ஹிந்தியிலும் கூட மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அடுத்ததாக ரிஷப் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 'காந்தாரா சாப்டர் 1' என்கிற பெயரில் இயக்கி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் நடிகர் பிரித்விராஜ் இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் முதல் வாரத்தில் மட்டுமே 55 சதவீதம் பங்கு தருவேன் என பிடிவாதம் காட்டினார் லிஸ்டின் ஸ்டீபன்.
தியேட்டர் அதிபர்களோ இரண்டு வாரத்திற்கும் 55 சதவீத பங்கு வேண்டும் என கேட்டனர். இதனால் காந்தாரா 2 கேரளாவில் வெளியாவதில் ஒரு இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கு 55 சதவீதம் பங்கு கொடுக்கப்படும் என லிஸ்டின் ஸ்டீபன் உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.