கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

கன்னடத்தில் துருவ சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே டி ; தி டெவில்'. இயக்குனர் பிரேம் இயக்கி உள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்துடன் பாலிவுட் நடிகை நோரா பதேகி ஒரு பாடலுக்கு இணைந்து ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளார். கடந்த மாதம் இந்த பாடலின் ஹிந்தி வெர்ஷன் வெளியானது. இந்த பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது. பெண்கள் ஆணையம் சஞ்சய் தத் மற்றும் நோரா பதேகி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பும் வரை இந்த விஷயம் சீரியஸ் ஆக சென்றது.
அதுமட்டுமல்ல படத்தின் இயக்குனர் பிரேம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பிரேம் இப்படி விமர்சனங்களுக்கு ஆளாவது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் அவருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்.
இது குறித்த சுதீப் கூறும்போது, ''வெளியில் இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இந்த விஷயத்தை பார்க்கட்டும்.. கருத்து கூறட்டும். ஆனால் நம்மவர்கள் இயக்குனர் பிரேம் இந்த கன்னட சினிமாவுக்கு கொடுத்துள்ள விஷயங்களை கவனித்து பார்க்க வேண்டும். பெற்றோரை பற்றிய பல பாடல்களை, அம்மாவிற்கு சமர்ப்பிக்கும் விதமாக திரும்பத் திரும்ப கேட்கும் உணர்ச்சிகரமான பல பாடல்களை கொடுத்தவர்தான் பிரேம். சில நேரங்களில் அவர் தவறு செய்திருக்கலாம். சில பாடல்கள் சரியாக அமையாமல் போய் இருக்கலாம். அதற்காக அவரை சிறுமைப்படுத்தும் விதமாக விமர்சிப்பது தவறு” என்று கூறியுள்ளார்.