ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள். பாலாஜி டெலி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும், கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் உள்ளார். அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 'ஆல்ட் பாலாஜி' என்ற ஓடிடி நிறுவனமும் உள்ளது. 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வென்றவர்.
'ஆல்ட் பாலாஜி' ஓடிடி தளத்தில் 2021ம் ஆண்டில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோரது தயாரிப்பில் 'காந்தி பாட்டி' என்ற 'அடல்ட்' நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் மைனர் நடிகையின் ஆபாசமான சில காட்சிகள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஏக்தா, ஷோபா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஒடிடி தளத்தில் 'காந்தி பாட்' ஷோ இடம் பெறவில்லை. பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.