அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள். பாலாஜி டெலி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும், கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் உள்ளார். அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 'ஆல்ட் பாலாஜி' என்ற ஓடிடி நிறுவனமும் உள்ளது. 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வென்றவர்.
'ஆல்ட் பாலாஜி' ஓடிடி தளத்தில் 2021ம் ஆண்டில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோரது தயாரிப்பில் 'காந்தி பாட்டி' என்ற 'அடல்ட்' நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் மைனர் நடிகையின் ஆபாசமான சில காட்சிகள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஏக்தா, ஷோபா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஒடிடி தளத்தில் 'காந்தி பாட்' ஷோ இடம் பெறவில்லை. பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.