சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர் உபேந்திரா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக காளீசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். இவரது மனைவி பிரியங்கா திரிவேதி. இவரும் நடிகை தான். தமிழில் அஜித்துடன் 'ராஜா' படத்தில் ஜோடியாக நடித்தவர். இந்த நிலையில் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன.
இந்த போன்களில் இருந்து அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள சிலருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று பணம் கேட்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் ஒரு சில நண்பர்கள் மூலமாக உபேந்திரா மற்றும் பிரியங்கா இருவருக்குமே தெரிய வந்தது. உடனடியாக இருவருமே தங்களது சோசியல் மீடியாவில் தனித்தனி வீடியோக்களை வெளியிட்டு ''எங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதனால் அதிலிருந்து பணம் கேட்டு வரும் மெசேஜ் நாங்கள் அனுப்பியது இல்லை. தயவு செய்து அதை புறக்கணியுங்கள். எங்கள் போன்கள் மீட்கப்பட்டதும் நாங்களே தகவல் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.