ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை என் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான புலி, போட் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் இவருக்கு எந்தவொரு முன்னனி நடிகர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லை. இப்போது சிம்புதேவன் புதிதாக இயக்கவுள்ள படத்தை ஒரு மும்பை பைனான்சியர் உடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக விமல் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே அவர் ஒரு வெப்சீரிஸ் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.




