'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கியவர் சிம்புதேவன். அதன் பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற படங்களை இயக்கினார். பின்னர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் மீண்டும் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் இருபத்தி நான்காம் புலிகேசி படத்தை தொடங்கினார். ஆனால் படம் தொடங்கப்பட்ட சில நாட்களில் வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதை அடுத்து அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பல வருடங்களுக்கு பிறகு கசடதபற என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன் தற்போது யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இந்தப் படம் மீனவர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.