ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கியவர் சிம்புதேவன். அதன் பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற படங்களை இயக்கினார். பின்னர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் மீண்டும் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் இருபத்தி நான்காம் புலிகேசி படத்தை தொடங்கினார். ஆனால் படம் தொடங்கப்பட்ட சில நாட்களில் வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதை அடுத்து அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பல வருடங்களுக்கு பிறகு கசடதபற என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன் தற்போது யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இந்தப் படம் மீனவர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.