மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சூர்யா - ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த ஜோதிகா மீண்டும் படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிப்பதோடு, அதை தயாரிக்கவும் உள்ளார். இதில் ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏற்கனவே 2018ல் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடித்தது குறிப்பிடத்தக்கது.




