ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

சிக்கந்தர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியான படம் மதராஸி. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம் கலவை விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை 80 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையை இயக்கத் திட்டமிட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அந்த கதையை சமீபத்தில் சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் அவரோ, பராசக்தி படத்திற்கு பிறகு தான் மூன்று இயக்குனர்களுக்கு கால்சீட் கொடுத்ததை சொல்லி அந்த படங்களுக்கு பிறகு தான் நடிக்க முடியும் என்று கூறிவிட்டாராம். இதனால் அதுவரைக்கும் சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கலாமா? இல்லை வேறு ஹீரோக்களின் கால்சீட் கிடைத்தால் அவர்களை வைத்து இந்த புதிய படத்தை இயக்கலாமா? என்கிற ஆலோசனையில் இருந்து வருகிறார்.




