தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாடகர் மனோவின் மகன் துருவ் 'வட்டக்கானல்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிதாக்புகழேந்தி இயக்குகிறார். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய பாடகர் மனோ, ''நான் கஷ்டப்பட்டு பாடி சம்பாதிக்கிறேன். ஒரு பாடலுக்கு சில ஆயிரங்கள் கிடைக்கிறது. ஆகவே, என்னால் படம் தயாரிக்க முடியாது அதற்கு மனசும் வரவில்லை. என் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் நீங்க படம் தயாரியுங்க. நாங்க சப்போர்ட் செய்கிறோம் என்கிறார்கள். அப்படி செய்தால் அந்த நட்பு முறிந்துவிடும். பல கோடி ஒரே நேரத்தில் காணாமல் போய்விடும்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, பாடகர் எஸ்பிபி தொடங்கி பலர் படம் தயாரித்து கஷ்டப்பட்டத்தை பார்த்து இருக்கிறேன். குறிப்பாக, அண்ணன் எஸ்.பி.பி படம் தயாரித்தார்; அதனால் ஏற்பட்ட கடனுக்கு பாட்டு பாடி வட்டி கட்டினார். ஆகவே, பாடுவதை மட்டுமே நான் தொழிலாக வைத்து இருக்கிறேன். என் மகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட, இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். என் அன்பு வேண்டுகோளை ஏற்று சங்கர் மகாதேவன், கார்த்திக் போன்ற பாடகர்கள் இந்த படத்தில் பாடிக்கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி'' என்றார்.
வட்டக்கானல் என்பது கொடைக்கானலில் உள்ள ஒரு ஏரியா. போதை காளான் விற்பனைக்கு புகழ்பெற்றது. இந்த படமும் அந்த போதைக்காளன் பின்னணியில் உருவாகி இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடித்துள்ளார். தனது மகன் எஸ்.பி.பி சரண் தயாரித்த மழை உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடைந்ததால் அதை அடைக்க பல்வேறு இசைக் கச்சேரிக்களை நடத்தி, பல்வேறு நாடுகளுக்கு சென்று அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து வட்டி கட்டியிருக்கிறார் எஸ்பிபி. அதைதான் மனோ பேசியிருக்கிறார்.