சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் மகேஷ்பாபுவுக்கு கவுதம் என்கிற மகனும், சித்தாரா என்கிற மகளும் இருக்கின்றனர். இங்கே தமிழ் திரையுலக பிரபலங்களைப் போல் அல்லாமல் தனது மகன், மகள் இருவரையுமே வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியே வளர்த்து வருகிறார் மகேஷ்பாபு. இதில் மகன் கவுதம் நியூயார்க்கில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். சமீபத்தில் அவர் பள்ளிப்படிப்பை முடித்ததை தொடர்ந்து பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டார் மகேஷ்பாபு. பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் மகேஷ்பாபு.
இது குறித்து மகேஷ்பாபு நெகிழ்ச்சியுடன் கூறும்போது, “என்னுடைய இதயம் பெருமையால் வெடிக்கிறது. உன்னுடைய கிராஜுவேஷனுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் மகனே.. இது நீ எழுதி இருக்கும் உன்னுடைய அடுத்த அத்தியாயம்.. அது மட்டுமல்ல.. முன் எப்போதையும் விட நீ இன்னும் பிரகாசிப்பாய் என்பதும் எனக்கு தெரியும். உன்னுடைய கனவுகளை துரத்திச் செல்.. உன்னுடைய தந்தையாக இன்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.