சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | ‛96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு | ‛லப்பர் பந்து' ரீமேக்கில் ஷாருக்கான் : சுவாசிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷ் உடன் மோதும் அதர்வா? | சிம்பு எடுத்த முடிவு | ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில் | 100வது நாளில் 'டிராகன்' | நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் | ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி | பிரதமர் அணிவித்த சால்வை : இளம் பாடகி ஸ்ரீநிதா நெகிழ்ச்சி |
இங்கே தமிழ் சினிமாவில் வாரம் நான்கு படங்கள் ரிலீஸானாலும் பெரிய படங்களை தவிர மற்ற படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் மலையாள சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே வெளியாகும் படங்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவைக்கும் விதமாகவே உருவாகி வருகின்றன. சின்ன பட்ஜெட்டில் உருவான பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் 100 கோடி, 200 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்துகின்றன.
அந்த வகையில் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் வெளியான ஆறாவது நாளிலேயே 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் இதேபோன்று 50 கோடிக்கு மேல் வசூலித்த ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். அது மட்டுமல்ல பிரித்விராஜ் மற்றும் மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
குடும்பப் பின்னணியில் கலகலப்பான காமெடி படமாக உருவாகியிருந்த இந்த படம் மேற்கூறிய எதிர்பார்ப்புகளால் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. வந்தவர்களை ஏமாற்றாமல் திருப்திப்படுத்தியும் அனுப்பியது. அந்த வகையில் அடுத்து 100 கோடி வசூல் கிளப்பில் இணையும் படம் இதுவாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது..