புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படம் 25 நாட்களில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் இதன் அலை பரவியுள்ளது. உங்களதுஅன்பான ஆதரவுக்கு நன்றி என படத்தின் கதாநாயகன் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
படம் வெளியான 3 நாட்களில் 50 கோடி, 10 நாட்களுக்குள் 100 கோடி, 25 நாட்களுக்குள் 150 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியான படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் 200 கோடிக்கு அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 150 கோடி வசூலித்து 'ஆடு ஜீவிதம்' இரண்டாவது இடத்தில் உள்ளது. 'பிரேமலு' படம் 130 கோடியைக் கடந்துள்ளது.
மலையாளத்தில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் 150 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடக்கவில்லை.