கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சுராஜ் வெஞ்சாரமூடு. அதைத்தொடர்ந்து சமீபகாலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார். கடந்த வருடம் இவர் தனது காரை ஓட்டிய போது சரத் என்கிற 31 வயது வாலிபர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் அந்த வாலிபர் பலத்த காயங்களுக்கு ஆளானார். இதற்கு சுராஜ் வெஞ்சாரமூடு அதிவேகமாக கார் ஓட்டியது தான் காரணம் என அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விசாரணைக்கு வருமாறு மோட்டார் வாகன அலுவலகத்தில் இருந்து மூன்று முறை சுராஜூக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் அதற்கு எந்தவித விளக்கமும் தரவில்லை. இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுராஜ் வெஞ்சாரமூடுவின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டிரைவிங் லைசென்ஸ் என்கிற படம் வெளியானது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு தான் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகரான பிரித்விராஜுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு கெடுபிடி காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுராஜூக்கு இப்போது அவரது டிரைவிங் லைசென்சே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமான விஷயம்தான்.