என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சென்னை அடுத்த வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் இயங்கி வரும் வி.ஐ.டி., பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது...
நாடு சுதந்திரம் பெற்ற பின், அனைத்து விஷயங்களிலும் நாம் வெற்றி அடைந்து விட்டோமா? நாட்டில், ஜாதி, மத வேறுபாடுகளை களைவதில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். நானும், என் தொழிலில் தோல்வி அடைந்திருக்கிறேன். அதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை. ஆனால், ஒவ்வொரு தோல்வியிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
உங்களின் முன்பு பேசுவது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. நான் கலையுலகத்தில் இன்றும் படித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். சோதனைகளை சாதனைகளாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். வி.ஐ.டி., பல்கலையில் பயின்ற மாணவர்கள், உலகின் பல நாடுகளில் பணியாற்றி, இந்தியாவுக்கும், இந்த கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்கள், தோல்விகளை இறக்கி வைத்து, வெற்றியை சுமந்தவர்களாக உள்ளனர். வெளிநாட்டிற்கு செல்லுங்கள், அங்கு கற்றுக் கொள்ளுங்கள், அங்கு சம்பாதித்து திரும்பி உங்கள் தாய்நாட்டுக்கு சேவை செய்யுங்கள்.
திமிரோ, வீரமோ, வணக்கத்திற்கு உரியது அல்ல; நம் தாய்மொழி தான் வணக்கத்திற்கு உரியது. வீரத்தின் உச்சமே, அஹிம்சை. நாத்திகம் என்ற வார்த்தையை, ஆத்திகம் தான் தந்தது. நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன். பகுத்தறிவு என்பது, அறிவு சார்ந்தது.
இவ்வாறு பேசிய கமல் பேசினார்.