வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் அதன் வித்தியாசமான மேக்கிங் மற்றும் புதுவிதமான கதை சொல்லல் முயற்சிக்காக மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் டர்போ மற்றும் பஷூக்கா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வருகின்றன. இதில் புலிமுருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் டர்போ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக மம்முட்டி நடித்து வரும் பஷூக்கா படத்தில் மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. தற்போது நடைபெற்று வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிமிஷ் ரவி என்பவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்ற சென்று விட்டார்.
இந்தநிலையில் இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் புதிய ஒளிப்பதிவாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் என்கிற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ரோபி வர்கீஸ் ராஜ். இவர் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கியவர் தான். ஆனால் தற்போது இயக்குனராக மாறிவிட்ட நிலையிலும் மம்முட்டியின் மீது கொண்ட அபிமானத்தால் மீண்டும் கேமராவை தனது தோளில் தூக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




