மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக துணிச்சலாக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து சமீபகாலமாக தெலுங்கிலும் வில்லனாக நடித்து வருகிறார் சுதேவ் நாயர்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியும் மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகையுமான அமர்தீப் கவுர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனது திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர்.