ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகை ஸ்ரத்தா தாஸ் இருவரும் மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் பயணித்தனர். கிளம்பி அரை மணி நேரம் ஆன நிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பற்றி ராஷ்மிகா கூறும்போது, ‛‛சாவில் இருந்து தப்பித்தோம்'' என்று விவரித்து இருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகாவுடன் கன்னடத்தில் பொகரு என்கிற படத்தில் நாயகனாக நடித்தவரும், மறைந்த நடிகர் சிரஞ்சீவி ஷார்ஜாவின் தம்பியுமான துருவ சார்ஜாவும் இதேபோன்று நேற்று முன் தினம் மேற்கொண்ட விமான பயணத்தில் சாவில் இருந்து மீண்டு வந்த தனது அனுபவத்தை திகிலுடன் விவரித்துள்ளார்.
துருவ சார்ஜா தற்போது நடித்து வரும் மார்ட்டின் படத்தின் படப்பிடிப்பிற்காக டில்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மழை காரணமாக ஆட்டம் கண்டது. இருந்தாலும் விமானியின் சாதுரியமான நடவடிக்கையால் ஒரு வழியாக பத்திரமாக ஸ்ரீநகரில் விமானம் தரை இறங்கியது.
இதுகுறித்து துருவ சார்ஜா விமானத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டு, “சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்து வந்துள்ளோம். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தங்களது கடவுள்களை உரக்க அழைத்தபடி பிரார்த்தனை செய்தது மனதை உருக்குவதாக இருந்தது. இருந்தாலும் கடவுளின் தூதராக வந்தது போன்று விமானி எங்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டார். அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.