'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் | தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் |
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் சலார் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் பிரபாஸ். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்கி, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் என அடுத்தடுத்த படங்கள் அவரது கைவசம் உள்ளன.
அதே சமயம் இந்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா கிளம்பி சென்றார் பிரபாஸ். நீண்ட நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த பிரபாஸுக்கு அங்கே முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். விமான நிலையத்தில் இருந்து தனது முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி தனி ஆளாக அவர் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.