மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகின் மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனுமான நரேஷ் என்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி முறையாக தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் நரேஷ் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என வழக்கு தொடர்ந்து பரபரப்பை கூட்டினார். அந்த சமயத்தில் நரேஷ், பவித்ரா, லோகேஷ் இருவரும் இணைந்து நடித்த மல்லி பெல்லி திரைப்படம் வெளியானது. இந்த படம் அவர்களது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருந்தது.
படம் ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் கூட இந்த திருமண சர்ச்சை காரணமாக இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானபோது ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்து உள்ளதாக கூறி இந்த படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி தற்போது ஓடிடி தளத்தில் இருந்து மல்லி பெல்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.