இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகின் மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனுமான நரேஷ் என்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி முறையாக தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் நரேஷ் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என வழக்கு தொடர்ந்து பரபரப்பை கூட்டினார். அந்த சமயத்தில் நரேஷ், பவித்ரா, லோகேஷ் இருவரும் இணைந்து நடித்த மல்லி பெல்லி திரைப்படம் வெளியானது. இந்த படம் அவர்களது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருந்தது.
படம் ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் கூட இந்த திருமண சர்ச்சை காரணமாக இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானபோது ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்து உள்ளதாக கூறி இந்த படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி தற்போது ஓடிடி தளத்தில் இருந்து மல்லி பெல்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.




