தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சினிமாவில் குணசித்ரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறவர் கராத்தே கல்யாணி. சமூக வலைத்தளங்கில் பிசியாக உள்ள கல்யாணி அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார்.
ஆந்திர மாநிலம் கம்மத்தில் என்டிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் சிலை அமைக்கப்படுகிறது. இதை கடுமையாக விமர்சித்துள்ள கராத்தே கல்யாணி "என்டிஆர் சிலையை நிஜ உருவத்தில் அமைக்க வேண்டும். கடவுள் உருவத்தில் அமைப்பது, அதுவும் குறிப்பாக கிருஷ்ணர் உருவத்தில் அமைப்பது யாதவ சமுதாயத்தை அவமதிப்பதாகும், மீறி அமைக்கப்பட்டால் சிலை உடைக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கம் கல்யாணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கல்யாணி பதில் அளித்திருந்தார். அந்த பதிலை ஏற்காத நடிகர் சங்கம், அவரை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளது. இதனை சங்க பொதுச் செயலாளர் ரவிபாபு அறிவித்துள்ளார்.